புத்தகம்

படிப்பாளியாக 10 கட்டளைகள்!

நம் அறிவை வளர்க்கும் புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக, யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு ஏப்ரல் 23-ம் தேதியை 'உலகப் புத்தக மற்றும் காப்புரிமை தினம்’ ஆக அறிவித்தது. எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள், பல்துறை வல்லுனர்கள் தங்கள் அறிவையும் அனுபவங்களையும்  புத்தகங்களாகப் பதிவுசெய்கின்றனர். சுண்டெலி முதல் சூரியக் குடும்பம் வரை அனைத்துத் தகவல்களையும்,  தலைமுறை தலைமுறையாக வழங்கிக்கொண்டு இருப்பவை புத்தகங்கள்தான். இந்தப் புத்தக தினத்தில், ... [மேலும் -> ]

மார்ச் 20 உலகச் சிட்டுக்குருவிகள் தினம்

நம்மை விட்டுப்பிரியும் சிட்டுக்குருவிகள்

மார்ச் 20: உலக சிட்டுக்குருவிகள் தினம்! 'மேல் பகுதியில் சாம்பல் நிறமாகவும் அடிப் பகுதியில் வெண்மை நிறமாகவும் இருக்கும். கழுத்தில் கருமையான திட்டுக்களோடு, பார்க்க அழகாக இருக்கும்.’ இன்னும் கொஞ்சம் நாளில் சிட்டுக்குருவிகளைப் பற்றி இப்படி விவரிக்கத்தான் முடியும். பார்க்க முடியாது. ஆம், சிட்டுக்குருவிகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இந்த சிட்டுக்குருவிகள்பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20-ம் தேதியை 'உலக ... [மேலும் -> ]

ஸ்டீபன் ஹாக்கிங்

ஸ்டீபன் ஹாக்கிங்

(நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தநாள் அன்று ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரை. இன்று ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தநாள்.) ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். 65 வயது. கடந்த 45 வருடங்களாக, கொடிய நோயுடன் போராடிக் கொண்டுஇருக்கிறார். உலகம் போற்றும் இயற்பியல் மேதையான இவரால் பிறர் உதவியில்லாமல் நடக்க, படிக்க, எழுத முடியாது. பேசும் திறனும் போய்விட்டது. இவரது மொத்த நடமாட்டமும் ஒரு சின்ன சக்கர நாற்காலியில் அடக்கம். ஆனால், இந்த மனிதரின் சிந்தனைகளோ ... [மேலும் -> ]

c32a

நோபல் பரிசு 2012

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் விஷயம்... சாதனையாளர்களின் திறமையை கௌரவிக்கும் நோபல் பரிசுகளுக்கான  அறிவிப்பு. இந்த ஆண்டு நோபல் வென்ற அறிஞர்கள் பற்றி 'நறுக் சுருக்’ தகவல்கள்... வேதியியல் பொதுவாகவே வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படும்போது  'முழுதாக வேதியியலுக்கு விருது வழங்கப்படுவது குறைந்துவிட்டது. வேதியியலை ஊறுகாய் மாதிரி தொட்டுக்கொண்டு இயற்பியல் அல்லது உயிரியல் சார்ந்த துறைக்கே பரிசு ... [மேலும் -> ]

சோளகர் தொட்டி

சோளகர் தொட்டி

சமீப காலத்தில் அதிக கனத்தோடு கையில் சுமந்து படிந்த புத்தகம் இந்த சோளகர் தொட்டி. கையிலிருந்த கனம் மனதில் ஏறி படிக்கமுடியாமல் இடையில் நிறுத்தி நிறுத்தி படித்த புத்தகம். இந்த அரசமைப்பு, அதிகாரத்தின் மீது கொன்டிருக்கிற தீராக்காதலால், அதற்கு பங்கம் ஏற்படும் போதெல்லாம் அடக்குமுறையைக் கையாள ஒரு போதும் தவறுவதில்லை. அடக்குமுறைக்கு உள்ளாகும் மக்கள் அந்த நாட்டின் சொந்தக் குடிகளா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் அதற்கு அக்கறையில்லை. இதுவரை மனித ... [மேலும் -> ]

le grand voyage movie review

LE GRAND VOYAGE – உறவின் பெரும் பயணம்

உறவுகளுக்கும், பயணங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு, இரண்டிலும் துணையைப் பொறுத்தே அது சிறப்பாய் அமைவதோ, சீரழிந்து போவதோ இருக்கும். அப்படி, சரியாக அமையாத தந்தை-மகன் உறவும், அவர்களின் நீண்ட பயணமும் தான் LE GRAND VOYAGE திரைப்படத்தின் கதை. சில பயண அனுபவங்கள் தரும் படிப்பினைகள் வாழ்நாள் முழுதும் வருபவை, சிறு வயதில் நண்பன் அடித்த கல்லின் வடு நீங்காமல் உடலில் எங்கோ இருந்துகொண்டு அந்த நண்பனை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பதைப் போல. அவர்களின் மொழியை அறியாத, ... [மேலும் -> ]

hypatia, christianity

அகோரா – மதத்தின் மகத்துவம்

"இதயமற்ற உலகில் இதயமாகஆன்மாவற்ற உலகில் ஆன்மாவாகஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகமக்களுக்கு அபினாக...."-காரல் மார்க்சு  " இந்தக் கடவுளை போட்டு உடைக்கிறேனே, வசைபாடுகிறேனே எதிர்த்து ஒன்றுமே சொல்வதில்லையே ஏன்? கேட்கும் திறனையும், பேசும் திறனையும் உணர்ச்சியையும் இழந்துவிட்டாரோ? " இதெல்லாம் பொய்யும் புரட்டும் உடல் முழுதும் கொண்ட நச்சு நாத்திகர்களுடைய பேச்சு போலவே இருக்கிறதில்லையா? அவர்களுடைய வேலையே இதுதானே. இந்த திராவிட இயக்கப் ... [மேலும் -> ]

தமிழ்

தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கும் வள்ளல்கள்

மதுக்கோப்பையை கையில் ஏந்திக் கொண்டு மதுவிலக்குப் பிரச்சாரம் செய்யக்கூடாதுதான். ஆனால், மோடி மதநல்லிணக்கத்துக்காக உண்ணாவிரதம் இருந்ததானது என்னை உற்சாகப் படுத்தி இதை எழுத தூண்டிவிட்டது. மோடிக்கு நன்றி. நிற்க. அய்ன்ச்டைன்(Albert Einstein), இந்தப் பெயரைக் கேட்டாலே தலை தெறிக்க ஓடுமளவுக்கு மூன்றாண்டுகள் கல்லூரிக்காலத்தில் ஒரு விரிவுரையாளர் இயற்பியலை சாறாய்ப் பிழிந்து எங்களை எல்லாம் திகைக்க வைத்தார். ஆனால், இயற்பியலை ஒரு பாடமாய் எடுத்துப் ... [மேலும் -> ]

Periyar_with_Jinnah_and_Ambedkar

தந்தை பெரியார் பிறந்தநாள்

கடந்து போன நேற்றைப் போலவே, இன்றும் ஒரு நாளே. நாளை, இந்த நாளும் கடந்து போயிருக்கும். ஆனால், சில நாட்கள் வரலாற்றின் பக்கங்களில் ஆழமான ஒரு அழுத்தத்தைப் பதிவு செய்து போயிருக்கும். அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதைப் போன்றதொரு நாள் இந்நாள். தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் இன்று. பெரும்பாலானவர்கள் இந்த உலகத்துக்கு தகுந்த படி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால், சிலரோ தங்களுக்கு ஏற்றபடி இந்த உலகத்தை மாற்றியமைக்க முயற்சிக்கிறார்கள். ... [மேலும் -> ]

Periyar Jeeva Painting

பெரியார் – கலகக் குரல்

"பெரியார் என்ன சாதித்தார்?” “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” இப்படிப் பல கேள்விகள் பெரியாரை நோக்கி, அவரைப் பற்றி அ'ன்னா ஆ'வன்னா மட்டுமே தெரிந்து கொண்டவர்களால் எழுப்பப்படுகிறது. இப்படியெல்லாம் கேள்வி கேட்கும் பல அரைகுறைகளில் ஒருவனல்ல நான். அந்தக் கிழவனின் சாதனையை அனுபவிக்கும் பல கோடிப்போரில் நானும் ஒருவன். பெரியார் சாதித்ததை அறிந்தவர்களில் நானும் ஒருவன். என்னுடைய 12 வயதில் ஒரு கவிதையை, என் பாட்டன் என் காது பட வாசித்திருக்கிறார், ... [மேலும் -> ]

நீதிக்கட்சி, பெரியார், தமிழ்நாடு

நீதிக்கட்சி வரலாறு

நீதிக்கட்சி வரலாறு என்ற புத்தகம் பற்றி நான் எழுதிய பதிவு குலேபகாவலியில் வெளியிடப்பட்டுள்ளது. புயல் வீசிச் சென்ற தடத்தில் வேம்புகளும் பெரும் ஆலமரங்களும் கூட வீழ்வது இயல்பே. அதே போல காலமும் சூறாவளியைப் போல சுழன்றடித்ததில் வரலாற்றுப் புத்தகத்திலிருந்து கிழித்தெறியப்பட்ட பக்கங்களில் நீதிக்கட்சியும் அதன் வரலாறும் ஒன்று. இத்தனைக்கும் 1917யிலேயே தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் முறையே திராவிடன், ஆந்திர பிரகாசினி மற்றும் ... [மேலும் -> ]

Road to perdition

Road To Perdition – நரகத்திலிருந்து விடுபடும் பயணம்

(நான் சொல்ற படத்தை யாருமே பாக்க மாட்டேன்றீங்க என்று கவலைப்படும், கொழந்தைக்கு இந்த பதிவு சமர்ப்பனம். நீங்க சொன்ன அன்னைக்கு ராத்திரியே படம் பாத்துட்டேன் கொழந்த.) தந்தை மகன் உறவை விட மிகவும் சிக்கலான வேறொரு உறவு இருந்துவிட முடியாது .ஷெல்லிக்கு அவர் தந்தையோடு வெளியே தெரியாத அளவுக்கு மோசமான சிக்கல் இருந்திருக்கிறது. ஹிட்லரும் அவர் தந்தையும் முட்டிக் கொன்டிருந்திருக்கிறார்கள். முன்னவரின் கவிதைகளின் வீரியத்திற்கு அந்த உறவுச்சிக்கல் காரணம், ... [மேலும் -> ]

சின்னக்குத்தூசி

சின்னக் குத்தூசி மறைவு

மூத்த திராவிட இயக்க எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான சின்னக் குத்தூசியாரின் இம்மை வாழ்வு இன்றுடன் முடிவு பெற்று மறுமை வாழ்வு துவங்கியது. மறுமையில் அவரைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்க அவருடைய எழுத்துக்களை அவர் விட்டுச் சென்றுள்ளார். அத்தனை பத்திரிகைகளிலும், அத்தனை பேர் எழுதும் கட்டுரைகளையும் வரி விடாமல் படிப்பதும், படித்ததை நினைவுகூர்ந்து குறிப்பிடுவதும் சின்னக் குத்தூசி அவர்களின் சிறப்பம்சம். என்று பா.ராகவன் ... [மேலும் -> ]

தமிழ் அகராதி

மின்தமிழ்

என் பாட்டன் இறப்பதற்கு முன்பு அவருடைய மகன்களுக்கும் மகள்களுக்கும் முன்பாகவே அவருடைய சொத்தில் ஒரு பங்கை நான் அபகரித்து வந்துவிட்டேன், சொல்லப்போனால், அவர் நம்பி என்னிடம் அந்த சொத்துக்களை ஒப்படைத்தார். இத்தனை வருடங்களாக (கிட்டத்தட்ட 13 ஆண்டுகள்) நான் பத்திரமாகவே பாதுகாத்து வந்திருக்கிறேன். அந்தச் சொத்துக்களில் சிலதை தொலைத்திருக்கிறேன். நான் தொலைத்த முக்கியமான சொத்து "வால்காவிலிருந்து கங்கை வரை", நான் அந்த புத்தகத்தை புதிய பதிப்பாகவே விலை ... [மேலும் -> ]

தமிழ்

தனித் தமிழ் பெயர் வைத்தது தவறா?

  ஆயிரம் குப்புசாமிகளும், ராமசாமிகளும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பெயராக சூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் நரேஷ், சுரேஷ், அஸ்வின் என்று பிறமொழிப் பெயர்களும் வலம் வந்து கொண்டிருக்கிறது, இது இன்று நேற்றைய பழக்கம் இல்லை, பாரி, ஓரி, ஆய், அண்டிரன் என்ற சங்கப் பெயர்களெல்லாம் மங்கிப் போய் ராஜராஜ சோழன்களும், விஜயாலய சோழன்களும் தோன்றிய சங்கம் மருவிய காலத்திலிருந்து நீண்டு வரும் பழக்கம். அப்போதே தமிழனின் பெயருடன் வடமொழிக் கலப்பு ... [மேலும் -> ]