அகோரா – மதத்தின் மகத்துவம்

பண்டைய எகிப்தின் அலெக்சாந்திரியா நகரத்தின் நூலகத்தில் ஐப்பேசியா(hypatia) மாணவர்களுக்கு இந்தப் பிரபஞ்சத்தின் கண்ணுக்குத்தெரியாத ஒரு சக்தியைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்கிறார், ஏன் நட்சத்திரங்கள் விழுவதில்லை, உங்கள் கையிலிருந்து விடுபடும் கைக்குட்டை ஏன் கீழே விழுகிறது என்றெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாள். அவளுக்குத்தெரியாது இதெற்கெல்லாம் காரணம் ஈர்ப்புவிசை என்று. இன்னும் நியூட்டன் வரவில்லை, ஈர்ப்புவிசை கண்டறியப்படவில்லை, அது தாலமியின் காலம், பூமியை மையமாக வைத்து எல்லாம் சுற்றிவரும் ஒரு மாதிரியைத் தந்து அந்த மாதிரியிலேயே பிரபஞ்சத்துக்கு அப்பால் பரலோகத்துக்கும், பரமபிதாவுக்கு இடமளித்திருப்பார். Continue reading

தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கும் வள்ளல்கள்

மதுக்கோப்பையை கையில் ஏந்திக் கொண்டு மதுவிலக்குப் பிரச்சாரம் செய்யக்கூடாதுதான். ஆனால், மோடி மதநல்லிணக்கத்துக்காக உண்ணாவிரதம் இருந்ததானது என்னை உற்சாகப் படுத்தி இதை எழுத தூண்டிவிட்டது. மோடிக்கு நன்றி. நிற்க. அய்ன்ச்டைன்(Albert Einstein), இந்தப் பெயரைக் கேட்டாலே தலை தெறிக்க ஓடுமளவுக்கு மூன்றாண்டுகள் கல்லூரிக்காலத்தில் ஒரு விரிவுரையாளர் இயற்பியலை சாறாய்ப் பிழிந்து எங்களை எல்லாம் திகைக்க வைத்தார். … Continue reading

தந்தை பெரியார் பிறந்தநாள்

கடந்து போன நேற்றைப் போலவே, இன்றும் ஒரு நாளே. நாளை, இந்த நாளும் கடந்து போயிருக்கும். ஆனால், சில நாட்கள் வரலாற்றின் பக்கங்களில் ஆழமான ஒரு அழுத்தத்தைப் பதிவு செய்து போயிருக்கும். அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதைப் போன்றதொரு நாள் இந்நாள். பெரும்பாலானவர்கள் இந்த உலகத்துக்கு தகுந்த படி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால், … Continue reading

நீதிக்கட்சி வரலாறு

நீதிக்கட்சி வரலாறு என்ற புத்தகம் பற்றி நான் எழுதிய பதிவு குலேபகாவலியில் வெளியிடப்பட்டுள்ளது. புயல் வீசிச் சென்ற தடத்தில் வேம்புகளும் பெரும் ஆலமரங்களும் கூட வீழ்வது இயல்பே. அதே போல காலமும் சூறாவளியைப் போல சுழன்றடித்ததில் வரலாற்றுப் புத்தகத்திலிருந்து கிழித்தெறியப்பட்ட பக்கங்களில் நீதிக்கட்சியும் அதன் வரலாறும் ஒன்று. இத்தனைக்கும் 1917யிலேயே தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் … Continue reading

Road To Perdition – நரகத்திலிருந்து விடுபடும் பயணம்

(நான் சொல்ற படத்தை யாருமே பாக்க மாட்டேன்றீங்க என்று கவலைப்படும், கொழந்தைக்கு இந்த பதிவு சமர்ப்பனம். நீங்க சொன்ன அன்னைக்கு ராத்திரியே படம் பாத்துட்டேன் கொழந்த.) தந்தை மகன் உறவை விட மிகவும் சிக்கலான வேறொரு உறவு இருந்துவிட முடியாது .ஷெல்லிக்கு அவர் தந்தையோடு வெளியே தெரியாத அளவுக்கு மோசமான சிக்கல் இருந்திருக்கிறது. ஹிட்லரும் அவர் … Continue reading

படுகொலைக்களம் – Killing Fields

இன்னும் எத்தனை நாளைக்கு hotel rwanda, schindlers list என்று ஜல்லியடித்துக் கொண்டிருப்பீர்கள்? #killing fieldsஐயும் பாருங்கள். ஒரு துளி கண்ணீராவது நிச்சயம் . அவற்றோடு நேரடி தொடர்பு இல்லை… இங்கே ஓம் என்று ஒரு பெண்ணின் தலைகுணிந்து சொல்லும் போது அந்த மொழிக்குச் சொந்தக்காரராக நாம் இது என் மொழி என்று சொல்லிக்கொள்ளவும் தகுதியிழந்து … Continue reading

சின்னக் குத்தூசி மறைவு

மூத்த திராவிட இயக்க எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான சின்னக்குத்தூசியாரின் இம்மை வாழ்வு இன்றுடன் முடிவு பெற்று மறுமை வாழ்வு துவங்கியது. மறுமையில் அவரைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்க அவருடைய எழுத்துக்களை அவர் விட்டுச் சென்றுள்ளார். அத்தனை பத்திரிகைகளிலும், அத்தனை பேர் எழுதும் கட்டுரைகளையும் வரி விடாமல் படிப்பதும், படித்ததை நினைவுகூர்ந்து குறிப்பிடுவதும் அவரது பேச்சின் சிறப்பம்சம். என்று பா.ராகவன் குறிப்பிட்டுள்ளார். … Continue reading

தெருநாயின் பையில் கிடந்த தலை

அவள் அழகான பெண்ணா என்றெல்லாம் தெரியாது, எங்கோ நெருங்கிய முகம்தான். அவளின் உடை நிறம் கூட இருள் தான், கையில் கனமான பை ஒன்று, வாங்கி எடை போடாமலே தெரிகிறது. அத்தனை பெரிய பையை அவள் அனாயசமாகத் தூக்கிச் செல்கிறாள். அவளைப் பின்தொடர்வது மட்டுமே இப்போதிருக்கும் ஒரே வேளை, அவளை விட அந்தக் கனமான பையில் … Continue reading

அம்பேத்கர் சிந்தனைகள்

(இன்று அம்பேத்கருடைய 121வது பிறந்தநாள்) யாகங்களில் பலியிடுவதை அங்கீகரிப்பது மதமாகாது.   எனக்கு எது அறிவூட்டுவதாக உள்ளதோ அதுதான் எனக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது.   எந்த மக்களிடையே நான் பிறந்தேனோ அந்த பட்டியல் சாதியினரின் மேம்பட்ட நிலைக்காக, சிறுவயது முதலே நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன்.   நமது வெளியுறவுத் துறை கொள்கையை நினைக்கும் … Continue reading

சாய் பாபாவோடு நாத்திகத்தையும் குழியில் புதைத்துவிடுங்கள் கலைஞரே

மரணம் எல்லோருக்கும் பொதுவானது, ஆத்திகம் வளர்த்த அவதாரங்களாகட்டும், தேவ தூதர்களாகட்டும், தன்னையே கடவுளாக அறிவித்துக் கொண்டவர்களாகட்டும், நாத்திகம் காத்தவர்களாகட்டும் (நன்றி ஆதி) எல்லோரையும் மரணம் சமமாகவே தழுவியிருக்கிறது, தர்க்கங்களை விட்டுப் பார்ப்போம், இதயம் துடிப்பதை நிறுத்தி, ரத்தம் தனது ஓட்டத்தை நிறுத்தி, மூளை வலியை, உணர்ச்சியை உணர மறுத்து, 21கிராம் உடல் எடையை இழந்தே அத்தனை … Continue reading