நீதிக்கட்சி வரலாறு

நீதிக்கட்சி, பெரியார், தமிழ்நாடு

நீதிக்கட்சி வரலாறு என்ற புத்தகம் பற்றி நான் எழுதிய பதிவு குலேபகாவலியில் வெளியிடப்பட்டுள்ளது. புயல் வீசிச் சென்ற தடத்தில் வேம்புகளும் பெரும் ஆலமரங்களும் கூட வீழ்வது இயல்பே. அதே போல காலமும் சூறாவளியைப் போல சுழன்றடித்ததில் வரலாற்றுப் புத்தகத்திலிருந்து கிழித்தெறியப்பட்ட பக்கங்களில் நீதிக்கட்சியும் அதன் வரலாறும் ஒன்று. இத்தனைக்கும் 1917யிலேயே தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் முறையே திராவிடன், ஆந்திர பிரகாசினி மற்றும் ஜஸ்டிஸ் (Justice) என்று மூன்று பத்திரிக்கைகளை நடத்தியவர்கள். அப்படி வரலாற்றை [...]

படுகொலைக்களம் – Killing Fields

இன்னும் எத்தனை நாளைக்கு hotel rwanda, schindlers list என்று ஜல்லியடித்துக் கொண்டிருப்பீர்கள்? #killing fieldsஐயும் பாருங்கள். ஒரு துளி கண்ணீராவது நிச்சயம் . அவற்றோடு நேரடி தொடர்பு இல்லை… இங்கே ஓம் என்று ஒரு பெண்ணின் தலைகுணிந்து சொல்லும் போது அந்த மொழிக்குச் சொந்தக்காரராக நாம் இது என் மொழி என்று சொல்லிக்கொள்ளவும் தகுதியிழந்து போகிறோம். இந்த ஆவணப்படம் என்ன செய்யப்போகிறது என்பது கேள்விக்குறிதான்? வல்லூறுகளின் அரவனைப்பில் ஓநாய் தஞ்சமடைந்திருக்கும் போது அதன் ஒரு ரோமத்தையும் [...]

சின்னக் குத்தூசி மறைவு

சின்னக்குத்தூசி

மூத்த திராவிட இயக்க எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான சின்னக்குத்தூசியாரின் இம்மை வாழ்வு இன்றுடன் முடிவு பெற்று மறுமை வாழ்வு துவங்கியது. மறுமையில் அவரைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்க அவருடைய எழுத்துக்களை அவர் விட்டுச் சென்றுள்ளார். அத்தனை பத்திரிகைகளிலும், அத்தனை பேர் எழுதும் கட்டுரைகளையும் வரி விடாமல் படிப்பதும், படித்ததை நினைவுகூர்ந்து குறிப்பிடுவதும் அவரது பேச்சின் சிறப்பம்சம். என்று பா.ராகவன் குறிப்பிட்டுள்ளார். அது போல, நான் விகடனில் எழுதிய என்னுடைய கட்டுரையை எடுத்துக் காட்டி முரசொலியில் அவர் எழுதிய இந்தக் கட்டுரை ஒன்றே [...]

சாய் பாபாவோடு நாத்திகத்தையும் குழியில் புதைத்துவிடுங்கள் கலைஞரே

saikalainjar

மரணம் எல்லோருக்கும் பொதுவானது, ஆத்திகம் வளர்த்த அவதாரங்களாகட்டும், தேவ தூதர்களாகட்டும், தன்னையே கடவுளாக அறிவித்துக் கொண்டவர்களாகட்டும், நாத்திகம் காத்தவர்களாகட்டும் (நன்றி ஆதி) எல்லோரையும் மரணம் சமமாகவே தழுவியிருக்கிறது, தர்க்கங்களை விட்டுப் பார்ப்போம், இதயம் துடிப்பதை நிறுத்தி, ரத்தம் தனது ஓட்டத்தை நிறுத்தி, மூளை வலியை, உணர்ச்சியை உணர மறுத்து, 21கிராம் உடல் எடையை இழந்தே அத்தனை பேரும் மரித்துப் போயிருக்கிறார்கள். மூன்றாம் நாள், உதிர்ந்த இலை இதுவரை தழைத்தது இல்லை. மூப்பாலும், உடல் செல்களின் புதுப்பிக்கும் வேகமும் [...]

இனி தேர்தலின் நிரந்தர அங்கம் இலவசம்.

கலைஞர்

ஐந்து ஆண்டுகளுக்கு முன் பள்ளி இறுதி வகுப்பில் நான் படித்துக் கொண்டிருந்த போது, எல்லாப் பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக அரசு மிதிவண்டிகளை வழங்கியது, அதற்கு முன் மாணவிகளுக்கு மட்டும். இது தேர்தல் நேர விளையாட்டு, இன்னும் எத்தனை நாளைக்கு என்று எள்ளி நகையாடினார்கள் அன்றைய எதிர்க் கட்சியினர். சில பல மாதங்களில் முதலில் தேர்தல் அறிவிப்பு வந்தது, பின்னர் கூட்டணி குழப்பங்கள் வந்தது, கூட்டணி முடிந்ததும் “கதாநாயகனைப் போல” திமுக வின் தேர்தல் அறிக்கையும் வந்தது. இரண்டு [...]

ஆதரிப்பீர் ஊழல் கூட்டணியை

flags

கூட்டாட்சி தத்துவத்தை வலியுறுத்தியவர்களின் கொள்கையெல்லாம் ஒவ்வொருவரும்/ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவரும்/ஒவ்வொரு பிராந்தியத்தைச் சேர்ந்தவரும் அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் பெரும் பொருட்டு அவர்களுடைய பிரதிநிதிகளை சட்டமியற்றும் அவைக்குத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதே. ஆனால், இன்றைய கூட்டாட்சி என்பது முன்னோர்களுடைய கொள்கைகளுக்கு நேர்மாறானதாக அமைந்து தொலைந்ததோடு அல்லாமல், அதன் உண்மையான பொருளை இழந்து போலியான வெற்று மயக்கம் கொண்டு திளைக்கிறது. எல்லாப் பகுதி மக்களுக்கும் சரியான பயன் போய்ச்சேர வேண்டுமென்ற நோக்கம், இன்று மருவி எல்லாக் கட்சியினருக்கும் பயன் போய்ச் சேரவேன்டும் என்ற நிலைக்கு [...]

விலைவாசியை குறைத்துள்ள தமிழக அரசு

tamilnadufreetv

பொருளாதாரம் தெரியாதவர்கள், நாட்டில் விலைவாசி உயர்ந்துவிட்டதாக ஒரே புள்ளிவிபரங்களாக கொட்டித்தீர்த்து இந்த அரசாங்கத்தை குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த அரசு, நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறது, அதிலும் முத்தமிழ் அறிஞரின் தலைமையிலான தமிழக அரசு மக்கள் நலனில், தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டு திறம்பட செயல்பட்டுவருகிறது. இதைப் பார்த்துதான் வடநாட்டு ஊடகமே தமிழக அரசுதான் இந்தியாவிலேயே சிறப்பான அரசாக தேர்ந்தெடுத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1500 ரூபாய்க்கு விற்ற வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இன்று [...]

அம்பேத்கரின் எழுத்துகளின் வழியே…

Periyar_with_Jinnah_and_Ambedkar

அம்பேத்கரின் கருத்துக்களில் இதற்கு முன் எனக்கு பெரிய பரிச்சயம் இல்லை, அதே போல லெனினுடைய எழுத்துக்களிலும் எனக்கு பரிச்சயம் இல்லை. பரிச்சயம் இல்லை என்பதைவிட அவர்கள் எழுத்துக்களின் கனம் தாளாதவனாகவே நான் இருந்திருக்கிறேன், அவர்கள் எழுத்தைப் புரிந்துகொள்ள முடியாத அறிவிலியாக இருந்திருக்கிறேன். இதைச் சொல்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. பெரியாரினுடைய எழுத்துக்கள் எனக்குள் தானாக உட்சென்றிருக்கின்றன, எளிமையான மொழி அவருடையது, அதே நேரத்தில் சொல்லவந்தக் கருத்தை முற்றிலுமாக சொல்லாமல் முற்றுப்பெற்று நின்றதில்லை. முன்பே சொல்லியதைப் போல, [...]

தமிழக மீனவர்கள் கொலையும் – ட்விட்டர்களாகிய நம் கடமையும்

தமிழக மீனவர்கள் ஐநூறு பேரை நாம் இதுவரை சிங்கள் ராணுவத்துக்கு பலிகொடுத்துள்ளோம். நம்முடைய அரசும் சரி, ஊடகங்களும் சரி இந்நிகழ்வில் பாராமுகமாக இருந்த போது தமிழ் ட்விட்டர்களாகிய நாம் ஒன்று கூடி நம் ஒற்றுமைய ட்விட்டரில் காட்டியதின் விளைவு சில வடநாட்டு ஊடகங்கள் நம்மைத் திரும்பி பார்த்தன. திரும்பிப் பார்க்க வைத்தோம். அது நம்முடைய முக்கிய வெற்றிகளில் ஒன்று. அதுவே போதுமானதா என்றால் நிச்சயம் இல்லை. தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்து வருபவர்களில் மீனவர்களும் நாமும் மட்டுமே [...]

தமிழ் மீனவர்கள் கொலையும்- தமிழ் ட்விட்டர்களின் முயற்சியும், வெற்றியும்

ஒரே நேரத்தில் பலரது முகத்திரை கிழியும் சமயம் இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கும். இந்திய அரசின் முகம், தமிழக அரசின் முகம், ஊடகங்களின் முகம், ஓட்டுக் கட்சிகளின் முகம், பொறுப்புணர்ச்சி அற்ற பிரதமரின் முகம், மௌனம் காக்கும் தமிழக முதல்வரின் முகம் என அத்தனை பேரின் முகமூடிகளும் உதிர்ந்து விழுந்து அவர்களின் போலி முகங்கள் தெரிய வந்திருக்கிறது. இந்திய அரசின் மெத்தனம்/அக்கறையின்மை/கையாலாகதத்தனம்/கூட்டுக் களவாணித்தனம் அத்தனையும் சேர்ந்து இதுநாள் வரை தமிழக மீனவர்கள் 500க்கும் மேற்பட்டவர்களை [...]