
பொருளாதாரம் தெரியாதவர்கள், நாட்டில் விலைவாசி உயர்ந்துவிட்டதாக ஒரே புள்ளிவிபரங்களாக கொட்டித்தீர்த்து இந்த அரசாங்கத்தை குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த அரசு, நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறது, அதிலும் முத்தமிழ் அறிஞரின் தலைமையிலான தமிழக அரசு மக்கள் நலனில், தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டு திறம்பட செயல்பட்டுவருகிறது. இதைப் பார்த்துதான் வடநாட்டு ஊடகமே தமிழக அரசுதான் இந்தியாவிலேயே சிறப்பான அரசாக தேர்ந்தெடுத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1500 ரூபாய்க்கு விற்ற வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இன்று [...]

