விலைவாசியை குறைத்துள்ள தமிழக அரசு

tamilnadufreetv

பொருளாதாரம் தெரியாதவர்கள், நாட்டில் விலைவாசி உயர்ந்துவிட்டதாக ஒரே புள்ளிவிபரங்களாக கொட்டித்தீர்த்து இந்த அரசாங்கத்தை குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த அரசு, நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறது, அதிலும் முத்தமிழ் அறிஞரின் தலைமையிலான தமிழக அரசு மக்கள் நலனில், தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டு திறம்பட செயல்பட்டுவருகிறது. இதைப் பார்த்துதான் வடநாட்டு ஊடகமே தமிழக அரசுதான் இந்தியாவிலேயே சிறப்பான அரசாக தேர்ந்தெடுத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1500 ரூபாய்க்கு விற்ற வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இன்று [...]

அடியாழத்தில் இருக்கும் வெறுப்பு

பிரபாகரன் குடும்பம்

“பொதுநல வாழ்விற்கு வந்த பின், மானம் கவுரவம் என்பதையெல்லாம் பார்க்கக் கூடாது” என்று பெரியார் ஒரு முறை மேடையில் குறிப்பிட்டாரே, இந்த வார்த்தைகளுக்குப் பின்னால், அந்தக் கிழவன் எத்தனை அனுபவத்தைப் பார்த்திருக்க வேண்டும். அத்தனையையும் பார்த்து இந்தச் சொல்படி நடந்ததால் தான், இறப்பதற்கு சில தினங்கள் வரைக்கும் கூட அத்தனை எதிர்ப்புகளையும் புறந்தள்ளி மேடையில் முழங்கினான். அவனேதான் தனிமனிதனின் சுயமரியாதையை இந்த மண்ணில் பெருமளவுக்கு போதித்தவன். அத்தனை வெறுப்புகளையும், கல்லடிகளையும் சந்தித்தவன் அவன். அவன் இறந்த முப்பது [...]

நீதிமன்ற தீர்ப்பும்- சில விவாதங்களும்

“நாட்டில் கலவரத்தைத் தூண்டாத வகையில், சமரசமாக வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு, திறமையானது, இதுதான் இந்நேரத்தில் தேவையானது” என்று பல குரல்கள் இத்தீர்ப்பையொட்டி. இத்தகைய குரல்களில் பெரும்பாலானவற்றின் பின்னால் இந்துப் பாசிசம் ஒளிந்துகொண்டு வெற்றியை கொண்டாடும் மனநிலைதான் இருக்கிறது. உண்மையிலேயே இது நியாயமான தீர்ப்பா? இல்லவே இல்லை, பல கேலிக்கூத்துகள் அடங்கியது இது. முற்றிலும் மதநம்பிக்கையினடிப்படையில் ஒரு தீர்ப்பு வழங்க முடியுமென்றால், வழஙகலாமென்றால், சட்டப் புத்தகங்கள் எதற்கு? சட்டக் கல்லூரிகளைத் தூக்கிவிட்டு, மதக் கல்வி போதிக்கும், நம்பிக்கையைக் கற்றுக்கொடுக்கும், மடங்களையும் [...]

காவியும் பச்சையும்- உடன் ஒரு நீதிமன்றத் தீர்ப்பும்

ஒவ்வொரு அமைப்பும் அதற்கு அடுத்து வரும் இன்னொரு அமைப்பால் சிதைக்கப்படுவதும், தன்னுடைய வலிமையை அடுத்தவன் மீது காட்ட அவனுக்கு சொந்தமான பொருளைத் தாக்குவதோ, அழிப்பதோ, வரலாறு நெடுக இருந்து வருகிறது. சங்க இலக்கியங்களில் வரும் திணைகள், நிரை கவர்தலையும், அதை மீட்டலையும், கொண்டே துவங்கி போரை நடத்தி வெற்றி பெற்றவனை பாராட்டுதல் என்று பண்ணிரு திணைகளாக முடிகிறது. ஆக அடுத்தவனைத் தாக்க அவன் பொருளைத் தாக்குவது என்பது ஈராயிரமாண்டு பழக்கம் என்பதற்கு நம்மிடமே இலக்கியச் சான்றுகள் இருக்கிறது. [...]

பகத் சிங்கின் பிறந்த நாளுக்கு அவர் சிலைக்கு மாலையிடலாமா?

இன்று காலை எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது, “காந்தியின் பிறந்தநாளை எல்லோரும் கொண்டாடுகிறோம். ஆனால், உண்மையான வீரணாக வாழ்ந்து, போராடி மடிந்து போன பகத்சிங்கின் பிறந்த தினத்தை ஏன் பெரும்பாலும் கொண்டாடுவதில்லை? அவனை நினைவு கூறவாவது செய்வோம்.” இதுதான் அந்த செய்தி. கன்னிமாரா நூலகத்துக்குச் செல்லும் வழியில் தினத் தந்தி மூலமாக,  தமிழ் வளர்த்த சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்ய ஒரு கும்பலே காத்திருந்தது, கருப்பு-மஞ்சள்-சிகப்பு வண்னங்களில் கொடியேந்திய கோஷ்டியும், வெள்ளை-சிகப்பு-வெள்ளை வண்ணங்களில் கொடியேந்திய [...]

அம்பேத்கரும் பகத்சிங்கும் தேசிய வீரர்களல்ல, அவர்கள் எழுத்தைப் படித்தால் கைது செய்யப்படுவீர்கள்

ஆகஸ்டு 28ஆம் தேதியிடப்பட்ட தெஹல்கா இதழில் இந்த தலைப்பில் ஒரு கட்டுரை வந்திருந்தது, படித்த போது எரிச்சலாகவே வந்தது. (மருத்துவர் ருத்ரன் முகநூலில் பகிர்ந்து கொண்டதாலேயே, இச்செய்தியை நேற்று படிக்க நேர்ந்தது, இல்லாவிடில் இன்னும் இரு நாட்கள் கழித்துதான் இச்செய்தியை நான் படித்திருப்பேன்.) 2007ஆம் ஆண்டிலிருந்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மகராஷ்டிரத்தில் UAPA(Unlawful Activities Protection Act) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதே சட்டத்தின் கீழ்தான் அம்பேத்கர், பகத் சிங்கின் புத்தகங்களை வைத்திருப்பவர்களையும், கைது செய்திருக்கிறார்கள். தெஹல்காவின் [...]

ஓஷோ – தீவிரவாதியா?

(நன்றி: விக்கிபீடியா) சமீபத்தில் Bio terrorism and Biological warfare – Prof.AL Bhatia, Dr.SK.Kushrestha என்ற புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அதில் முதல் நூறு பக்கங்களில், உயிரி ஆயுதப் போர் பற்றியும், உயிரி ஆயுதங்களின் தீவிரம் பற்றியும், பக்கமாக கொட்டியிருக்கிறது. அந்த புத்தகம் இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடந்த முதல் உயிரி ஆயுத தாக்குதலைப் பற்றிய ஒரு தகவலைச் சொல்லியிருக்கிறது. அந்த தகவல். டெல்லாஸ், மாகாணத்தில், 750க்கு மேற்பட்ட மக்கள் நஞ்சான உணவு உட்கொண்டதால் உடல்நலம் [...]

இந்திய அரசர்கள் (மௌரியர்கள் முதல் 2010 வரை)

பொதுவாக எல்லா நாடுகளின் வரலாறையும் பண்டைய, மத்திய, நவீன கால வரலாறு என்றே பிரிப்பார்கள், இந்திய வரலாறும் அதேபோலத்தான். அந்தக் காலக் கணக்கில்தான், ஒவ்வொருவருக்கும் வேறுபாடு நிலவுகிறது. ஆரியர்களின் வருகைக்குப் பிறகிலிருந்து கிபி.1000 வரை பண்டைய இந்திய வரலாறு(Ancient Indian History) என்று ஒரு சாராரும், இன்னொரு சாரார் சிந்துசமவெளி நாகரிக காலத்திலிருந்து, கிபி1000 வரை என்றும். (இன்னொரு சாரார், இந்தக் காலக் கனக்கை ஏற்றுக்கொள்ளாமல் புதியக் காலக்கணக்கையும் வெளியிடுகிறார்கள்.) ஆனால், இந்தக் காலக் கணக்கு (சிந்துசமவெளி [...]

வல்லாதிக்க கனவில் இந்தியா

நான், பிரதமரைப் போல பொருளாதாரப் புலி இல்லை, பொருளாதாரத்தை படித்தவனும் இல்லை, என் பார்வையில் பட்ட செய்தியையும், நிதிஉதவி அளித்தல் என்ற பெயரில் நாடுகளை அடிமையாக்கும் புதிய முறையைப் பற்றி படித்தவன் என்ற ரீதியிலுமே இக்கட்டுரை. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்(Confessions of an economic hit man) படித்தவர்களுக்கு தெரியும், நிதிஉதவிகளின் பின்னால் இருக்கும் அரசியல். மூன்றாம் உலக நாடுகளுக்கு நிதிஉதவி செய்கிறேன் என்ற பெயரில், உள்ளூர நடந்த வேலைகளை, அந்நாடுகளை மீளாக்கடணில் ஆழ்த்தி, [...]

காணவில்லை

நடைபெற்றுக் கொண்டிருக்கும் மழைக் காலக் கூட்டத்தொடரில் எல்லோரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தது, ஆனால், நேற்று காங்கிரஸின் இரு பெருந்தலைகள் அவைக்கு வரவில்லை, ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, இன்னொருவர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி. இது நேற்றைய செய்தி. இனி, இன்றைய செய்தி. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பிரதீபா பாட்டீல், ஹமீத் அன்சாரி போன்ற முக்கியத் தலைவர்களுடன் பேசவும், நாரயணமூர்த்தியுடன் [...]