நீதிக்கட்சி வரலாறு

நீதிக்கட்சி, பெரியார், தமிழ்நாடு

நீதிக்கட்சி வரலாறு என்ற புத்தகம் பற்றி நான் எழுதிய பதிவு குலேபகாவலியில் வெளியிடப்பட்டுள்ளது. புயல் வீசிச் சென்ற தடத்தில் வேம்புகளும் பெரும் ஆலமரங்களும் கூட வீழ்வது இயல்பே. அதே போல காலமும் சூறாவளியைப் போல சுழன்றடித்ததில் வரலாற்றுப் புத்தகத்திலிருந்து கிழித்தெறியப்பட்ட பக்கங்களில் நீதிக்கட்சியும் அதன் வரலாறும் ஒன்று. இத்தனைக்கும் 1917யிலேயே தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் முறையே திராவிடன், ஆந்திர பிரகாசினி மற்றும் ஜஸ்டிஸ் (Justice) என்று மூன்று பத்திரிக்கைகளை நடத்தியவர்கள். அப்படி வரலாற்றை [...]

மின்தமிழ்

தமிழ் அகராதி

என் பாட்டன் இறப்பதற்கு முன்பு அவருடைய மகன்களுக்கும் மகள்களுக்கும் முன்பாகவே அவருடைய சொத்தில் ஒரு பங்கை நான் அபகரித்து வந்துவிட்டேன், சொல்லப்போனால், அவர் நம்பி என்னிடம் அந்த சொத்துக்களை ஒப்படைத்தார். இத்தனை வருடங்களாக (கிட்டத்தட்ட 13 ஆண்டுகள்) நான் பத்திரமாகவே பாதுகாத்து வந்திருக்கிறேன். அந்தச் சொத்துக்களில் சிலதை தொலைத்திருக்கிறேன். நான் தொலைத்த முக்கியமான சொத்து “வால்காவிலிருந்து கங்கை வரை”, நான் அந்த புத்தகத்தை புதிய பதிப்பாகவே விலை கொடுத்து வாங்கியிருந்தாலும், என் பாட்டன் புரட்டிய, அடிக்கோடிட்ட புத்தகத்தைப் [...]

குஞ்சிதம் குருசாமியின் சொற்பொழிவுகள்-2

இப்பதிவின் முந்தைய பகுதி இங்கே நான், சொல்லுகின்ற விஷயங்களில் சில வார்த்தைகள் சிலருக்குச் சற்று அதிக காரமானதாய் இருக்கலாம். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? ஆயிரக்கணக்கான வருஷங்களாய் மூடநம்பிக்கைகளிலும் குருட்டுத் தனமான பழக்க வழக்கங்களிலும் ஈடுபட்ட ஒரு ஜனசமூகத்திற்குக் கொஞ்சம் வேகமான மருந்து கொடுத்துதான் வியாதியைத் தீர்க்க வேண்டியிருக்கிறது.” என்கிறார். அவருடைய சொற்பொழிவுகள் உண்மையிலேயே கடுமையான மருந்தைத் தான் கொடுத்திருக்கின்றன என்பதை தெளிவாக காட்டுகின்றன. இங்கு, பெரியாரையும் அவருடைய சொற்பொழிவுகளையும் விடுத்துப் பார்ப்போமானால், இத்தனை வீரியமான [...]

குஞ்சிதம் குருசாமியின் சொற்பொழிவுகள்-1

திராவிட இயக்கத்திலும், அதன் வரலாற்றினூடேயும் கரைந்து போன மூத்தவர்களுக்கு குஞ்சிதம் குருசாமி என்ற பெயர் திராவிட இயக்கத்தில் ஆழ்ந்த புலமை கொண்ட தலைவர்களுள் ஒருவர் என்பது தெரியும். திராவிடம், திராவிடர் என்ற சொற்கள், அரசியல் கட்சிகளாலும், அவற்றின் அரைகுறைத் தலைவர்களாலும் கொச்சைப்படுத்தப்பட்ட, பொருளிழக்கப்பட்ட சொற்களில் ஒன்றாகிப்போன காலகட்டத்தைச் சேர்ந்த என்னைப் போன்ற இளம் தலைமுறையினர் பலரும் அறிந்தும் கூட இராத ஒரு தலைவர் குஞ்சிதம் குருசாமி அம்மையார். அவரைப்பற்றி இதற்கு முன்பு அறிந்ததெல்லாம், குத்தூசி குருசாமியின் துனைவியார் [...]

பாலஸ்தீனக் கவிதைகள் – 1

எங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ அங்கெல்லாம், பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும் – பிரடெரிக் எங்கெல்ஸ் ஈழம், பாலஸ்தீனம், திபெத், காஷ்மீர் என்று உலக வரைபடத்தில் ஒவ்வொரு பிரதேசங்களும் மற்ற வல்லரசு/வல்லரசாக ஆகத் துடித்துக் கொண்டிருக்கும் மூன்றாம் உலக நாடுகளாலும், இனவெறி/ஆதிக்க அரசுகளாலும் வதை பட்டுக் கொண்டிருக்கும் பல தேசிய இனங்கள் ரத்தமும் கண்ணீரும் சிந்திக் கொண்டிருக்கின்றன. ஒரு இனத்தவன் கல்லெறிகிறான், இன்னொருவன் மதத்தின் தலைமையின் கீழ் செல்ல, மூன்று சரணங்களுக்கு கச்சாமி பாடுகிறான், அதே [...]

மண்ணும் சொல்லும் – மூன்றாம் உலகக் கவிதைகள்

கவிதை வானத்தை மூடி மறைக்க முயலும் ரேடார்களையும் ஏவுகணைகளையும் மீறி உலகெங்கும் சொல் தொடர்ந்து பறக்கும் எந்த ஒரு விமான தளத்திலும் அது வந்து இறங்குவதை தடை செய்ய முடியாது, தடுக்க முடியாது ஏனெனில் சொல் என்பது ஒரு பறவை நுழைவுச் சீட்டுத் தேவையில்லை அதற்கு ~ நபில் ஜனாபி (ஈராக்கைச் சேர்ந்த கவிஞர். மேலே உள்ள கவிதையை குர்திஸ்தான் சுதந்திர தினத்தன்று அவ்விழாவில் பாடியதற்காகவும், அவ்விழாவில் கலந்து கொண்டதற்காகவும் தன் நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்.) [...]

சோமநாதபுரம் கதையும் வரலாறும் – ரூமிலா தாப்பர்

மார்ச் மாதம் 1999ஆம் ஆண்டு, மும்பை பல்கலைக் கழகத்தில் இந்தியாவில் நாணயவியல் துறையை வளர்த்தெடுத்தவரும், கணித துறை பேராசிரியரும், மார்க்சிய நோக்கில் வரலாற்றை ஆய்வு செய்து, புத்தகங்களை படைத்தவருமான டி.டி.கோசாம்பியின் (தாமோதர் தர்மானந்த் கோசாம்பி) நினைவுப் பேருரையாற்ற வரலாற்றாசிரியர் ரூமிலா தாப்பர் வந்திருந்தார், அவர் ஆற்றிய உரை ஒரு வகையில் சிறப்பு மிக்கது, இதுவரையிலும் வரலாறு என்ற பெயரில் சொல்லப்பட்டு வரும் கதையின் பின்புலத்தை அலசி ஆராய்ந்து அவர் ஆற்றிய உரை, தற்போது (மே 2010ல்) தமிழில் [...]

ஒரு காதலும், இரு மாநிலங்களும் – 2states

எனக்கும் நாவல்களுக்கும் உள்ள தொடர்பு, புஷ்ஷுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் உள்ள தொடர்பை விட கேவலமானது, வால்காவிலிருந்து கங்கை வரை, என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, இம்மூன்றைத் தவிர வேறு எந்த நாவல்களையும் படித்ததில்லை, எதனாலோ, சேத்தன் பகத்தினுடைய 2ஸ்டேட்ஸ் நாவலை படிக்கத் தோன்றியது, இதை நண்பனொருவனிடம் சொன்னபோது, லவ் மூட் ஆரம்பமாயிடுச்சு, என்றான், அந்த அளவுக்கு காதல் இந்நாவலில் இல்லை என்றே எனக்கு தோன்றியது. இன்னும், சில ஏமாற்றங்களையும் என்னிடம் நாவல் விதைத்திருக்கிறது.

மனித குலமும் தமிழ்த் தேசியமும்

சிறை சிலருக்கு தண்டனையாக இருக்கலாம், சிலர் அந்த தண்டனையையே பயனுள்ளதாக மாற்றுவார்கள், (மற்றவர்களுக்கும் சேர்த்து) பழ.நெடுமாறனும் அந்த வகையில் பொடாவில் அவரை உள்ளே தள்ளிய போது பல புத்தகங்களை எழுதி இச்சமூகத்துக்கு படைத்தார், அந்த புத்தகங்கள் சிறை மலர்கள் என்ற பெயரில் தொகுப்பாக வந்தன. அந்த சிறைமலர்கள் வரிசையில் மூன்றாவது புத்தகம் “மனிதகுலமும் தமிழ்த் தேசியமும்“. இந்தச் சிறை மலரில் இன்னுமொரு முக்கிய புத்தகம் “உருவாகாத இந்திய தேசியமும், உருவான இந்து பாசிசமும்“. பழநெடுமாறன் அய்யாவினுடைய புத்தகங்களில் [...]

ஸ்கூப் – வரலாற்றுப் பின்னணியின் பின்னணி

“அப்பாவோட புத்தகங்களுக்கு வர ராயல்டிய வச்சு இங்கிலாந்தில் குடும்பத்தை ஓட்ட முடியுமா? நான் அங்க போயிடலாமான்னு யோசிக்கிறேன்” இப்படி ஒரு பெண்மனி கேட்டிருக்கிறார், அவர் கேட்ட படி தன் தந்தையின் புத்தகங்களின் ராயல்டியை நம்பி அவர் இங்கிலாந்துக்குச் சென்றிருந்தால், இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு களங்கம் வராமல் இருந்திருக்கலாம், இந்திய வரலாறு கொஞ்சம் திசை மாறியிருக்கும். “பாக்கிஸ்தான் கட்டாயம் இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் உடைந்துவிடும்” என்று அப்போதே நான் கூறினேன் என்று டாம்பீக தாத்தாச்சாரியர் ஒருவர் பெருமையடித்திருக்கிறார். அவர் கூறியது [...]