
பண்டைய எகிப்தின் அலெக்சாந்திரியா நகரத்தின் நூலகத்தில் ஐப்பேசியா(hypatia) மாணவர்களுக்கு இந்தப் பிரபஞ்சத்தின் கண்ணுக்குத்தெரியாத ஒரு சக்தியைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்கிறார், ஏன் நட்சத்திரங்கள் விழுவதில்லை, உங்கள் கையிலிருந்து விடுபடும் கைக்குட்டை ஏன் கீழே விழுகிறது என்றெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாள். அவளுக்குத்தெரியாது இதெற்கெல்லாம் காரணம் ஈர்ப்புவிசை என்று. இன்னும் நியூட்டன் வரவில்லை, ஈர்ப்புவிசை கண்டறியப்படவில்லை, அது தாலமியின் காலம், பூமியை மையமாக வைத்து எல்லாம் சுற்றிவரும் ஒரு மாதிரியைத் தந்து அந்த மாதிரியிலேயே பிரபஞ்சத்துக்கு அப்பால் பரலோகத்துக்கும், பரமபிதாவுக்கு இடமளித்திருப்பார்.

