அகோரா – மதத்தின் மகத்துவம்

hypatia, christianity

பண்டைய எகிப்தின் அலெக்சாந்திரியா நகரத்தின் நூலகத்தில் ஐப்பேசியா(hypatia) மாணவர்களுக்கு இந்தப் பிரபஞ்சத்தின் கண்ணுக்குத்தெரியாத ஒரு சக்தியைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்கிறார், ஏன் நட்சத்திரங்கள் விழுவதில்லை, உங்கள் கையிலிருந்து விடுபடும் கைக்குட்டை ஏன் கீழே விழுகிறது என்றெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாள். அவளுக்குத்தெரியாது இதெற்கெல்லாம் காரணம் ஈர்ப்புவிசை என்று. இன்னும் நியூட்டன் வரவில்லை, ஈர்ப்புவிசை கண்டறியப்படவில்லை, அது தாலமியின் காலம், பூமியை மையமாக வைத்து எல்லாம் சுற்றிவரும் ஒரு மாதிரியைத் தந்து அந்த மாதிரியிலேயே பிரபஞ்சத்துக்கு அப்பால் பரலோகத்துக்கும், பரமபிதாவுக்கு இடமளித்திருப்பார்.

சாய் பாபாவோடு நாத்திகத்தையும் குழியில் புதைத்துவிடுங்கள் கலைஞரே

saikalainjar

மரணம் எல்லோருக்கும் பொதுவானது, ஆத்திகம் வளர்த்த அவதாரங்களாகட்டும், தேவ தூதர்களாகட்டும், தன்னையே கடவுளாக அறிவித்துக் கொண்டவர்களாகட்டும், நாத்திகம் காத்தவர்களாகட்டும் (நன்றி ஆதி) எல்லோரையும் மரணம் சமமாகவே தழுவியிருக்கிறது, தர்க்கங்களை விட்டுப் பார்ப்போம், இதயம் துடிப்பதை நிறுத்தி, ரத்தம் தனது ஓட்டத்தை நிறுத்தி, மூளை வலியை, உணர்ச்சியை உணர மறுத்து, 21கிராம் உடல் எடையை இழந்தே அத்தனை பேரும் மரித்துப் போயிருக்கிறார்கள். மூன்றாம் நாள், உதிர்ந்த இலை இதுவரை தழைத்தது இல்லை. மூப்பாலும், உடல் செல்களின் புதுப்பிக்கும் வேகமும் [...]

பாழாய்ப் போன பொங்கல்

“நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து முனமுனவெண்று சொல்லும் மந்திரம் ஏதடா நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் தூய கறிச்சுவை அறியுமோ” -சிவவாக்கியச் சித்தர் திருவிழாக்களின் கெடுதிகளை, செலவினங்களை, ஆதிக்கச் சாதிகளின் திமிர்த்தனத்தை, எல்லாம் வளர்க்கும் நிகழ்வுகளே, இத்தகைய திருவிழாக்கள் எனப் பகுத்தறிவாளர்கள் முதல் பலரும் எடுத்துரைக்கும் போதெல்லாம், பலரின் பதில் திருவிழாக்கள் சுற்றம் சூழ குடும்பத்தோடு மகிழ்ச்சியில் திளைக்கத்தான், “ஊரெல்லாம் ஒன்று கூடி ஒலிக்க (அழுதிட்டு)…” [...]

பகத் சிங்கின் பிறந்த நாளுக்கு அவர் சிலைக்கு மாலையிடலாமா?

இன்று காலை எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது, “காந்தியின் பிறந்தநாளை எல்லோரும் கொண்டாடுகிறோம். ஆனால், உண்மையான வீரணாக வாழ்ந்து, போராடி மடிந்து போன பகத்சிங்கின் பிறந்த தினத்தை ஏன் பெரும்பாலும் கொண்டாடுவதில்லை? அவனை நினைவு கூறவாவது செய்வோம்.” இதுதான் அந்த செய்தி. கன்னிமாரா நூலகத்துக்குச் செல்லும் வழியில் தினத் தந்தி மூலமாக,  தமிழ் வளர்த்த சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்ய ஒரு கும்பலே காத்திருந்தது, கருப்பு-மஞ்சள்-சிகப்பு வண்னங்களில் கொடியேந்திய கோஷ்டியும், வெள்ளை-சிகப்பு-வெள்ளை வண்ணங்களில் கொடியேந்திய [...]

என் பார்வையில் பெரியார் – கோ.வி.கண்ணன்

(என் பார்வையில் பெரியார் கட்டுரைக்காக அணுகியபோது, தன் வலைப்பதிவில் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளிலிருந்து இக்கட்டுரையை தொகுத்து தந்தார். வல்லளாரையும், பெரியாரையும் ஒன்றாக கருதுபவர். பெரியார், தன் ஆயுள் காலம் முழுதும் எந்த மதத்தை எதிர்த்தாரோ அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள், பெரியாருக்கு கடன் பட்டவர்கள் என்னும் தன் பார்வையை இங்கு பதிவு செய்கிறார். வலைப் பதிவு: http://govikannan.blogspot.com) ஆத்திகம் அறிவிழந்து மக்களின் வாழ்வியலை கேள்விக் குறி ஆக்கிய போதெல்லாம் சமணர், புத்தர் இன்னும் எண்ணற்றோர் வரிசையில் நாத்திக பெரியார்கள் [...]

என் பார்வையில் பெரியார் – வினோத்

(கல்லூரியில் என்னோடு பயின்றவன், என் பார்வையில் பெரியார் என்று கட்டுரைகளைத் தொகுக்க எண்ணியபோது, கவிதையையும் சேர்க்கலாம் எனத் தோன்றியது, கவிதைக்காக நான் முதலில் கேட்டது இவனைத் தான், ஒரு நாள் இடைவெளியில் எழுதித் தந்தான், சில இடங்களில் மட்டும் திருத்தம் செய்து, இன்னும் சில தகவல்களைச் சேர்க்கச் சொல்லி நான் தொல்லை தந்த போதும், பொறுமையாய் மாற்றங்களோடு இக்கவிதையை தந்தான். வலைப்பதிவு: http://ennachidharal.blogspot.com ) சிந்திப்பதாலொன்றும் சிரம் சிதறிடாதென்று சொல்லி திரிந்தார் தான் சொல்வதையும் சேர்த்து எவன் [...]

என் பார்வையில் பெரியார் -3 தமிழினியன்

என் பார்வையில் பெரியார் -1 தமிழினியன் என் பார்வையில் பெரியார் -2 தமிழினியன் தந்தை பெரியார், வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டும்தான் இருந்தாரா? பெண்ணுரிமைக்காக அவர் குரல் கொடுக்கவில்லையா? சமூக நீதித்துறையில் அவர் செய்யாத போராட்டங்களா? வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்துக்காக அவர் மேற்கொள்ளாத முயற்சிகளா? அரசியல் சாசனத்தையே முதல் முறையாக திருத்தி எழுதும் அளவிற்குத்தானே அவர் போராட்டம் இருந்தது. “இந்த அரசியல் சாசனத்தை முதலில் கொளுத்தும் ஆளாக நான் இருப்பேன்” என்று பாராளுமன்ற அவையில் முழங்கிய அம்பேத்கரால் [...]

யார் இங்கு மறப்பார் பெரியாரை

பெரியார் ஒருவர்தான் பெரியார் அவர் போல் பிறர் யார் பெருமைக்கு உரியார் – தந்தை பெரியார் பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி தமிழர் புகழ்நாட்டி வாழ்ந்த வழிகாட்டி – தந்தை பெரியார் மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான் மனிதனைத் தீண்ட மறுத்தானே! நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன் நரிகளின் வாலை அறுத்தானே! கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில் கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்! காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரை கிழவன்; [...]

என் பார்வையில் பெரியார் – ரவிச்சந்திரன்

(ரவிச்சந்திரன்: என் பார்வையில் பெரியார் கட்டுரை தொகுப்புக்காக நான் அனுகிய பல பதிவர்களில் ரவிச்சந்திரனும் ஒருவர். தஞ்சைக்காரர், தஞ்சையை அடுத்த வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர், கிராமத்தின் பெயரிலேயே தன்னுடைய வலைப்பதிவை நடத்தி வருகிறார், தற்போது சிங்கப்பூரில் வாசம், சென்ற வார தமிழ்மன நட்சத்திரம், அலுவலக் வேலையின் காரணமாக புதிய கட்டுரை எழுத இயலாமல் போனதால், சென்ற ஞாயிறன்று அவர் எழுதியிருந்த கட்டுரையை  திருத்தி பயண்படுத்திக் கொள்ள அனுமதித்திருந்தார். அந்தக் கட்டுரை கீழே. அவருடைய வலைப்பதிவு http://vssravi.blogspot.com) “…சிவந்த [...]

என் பார்வையில் பெரியார் -2 தமிழினியன்

அறிமுகம் என் பார்வையில் பெரியார் -1 தமிழினியன் லொயோலாவில் படித்த காலத்தில் எனக்கு, ஆறுமுகப் பிள்ளை என்பவர் தமிழ் பேராசிரியராக இருந்தார், அவர் வகுப்பு எப்போதும் கலகலப்பாகவும், சில சமயங்களில் பொருள் பொதிந்ததாகவும், பல சமயங்களில் இரு பொருள் பொதிந்ததாகவும் இருந்ததுண்டு. அவரைப் பற்றி அந்த மாதிரியான பிம்பம் மட்டுமே எனக்கிருந்தது. அதற்கடுத்த பருவத்தில் உரையாடல் கலை வகுப்பில் ஒரு நாள் சிறப்பு அழைப்பாளராக எங்களோடு உரையோட அவரை அழைத்திருந்தோம், “…நான் எம்.பில் படிக்கும் போது பெரியார் [...]